தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை நிறைவு!

தமிழகத்தில் அதிகாலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு.

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ தொடர்புடைய இடங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் நாடு முழுவதும் இதுவரை 106 நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு பெற்றுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. சோதனையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட புகார்களில் என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த சோதனையில் தமிழகத்தில் மட்டும் 10 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.

Leave a Comment