ஓவல் மற்றும் லார்ட்ஸில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெறும்-ஐசிசி.!

Default Image

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை, ஐசிசி அறிவித்துள்ளது.

2023 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி, லண்டனிலுள்ள ஓவல் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் வைத்து நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஓவலில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஐசிசி தலைமை நிர்வாகி ஜியோஃப் அலார்டிஸ் கூறினார்.

மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான இறுதிப் போட்டியை லார்ட்ஸில் நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப் மற்றும் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் ஆகியோருக்கு ஐசிசி சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

கடந்த ஆண்டு சௌதாம்ப்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவை வென்று முதன்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்