‘அந்த பொம்பள இருக்காளே’ – பெண் காவலரை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்.!

Default Image

அதிமுக அரசியல் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், ஓர் பெண் காவலரை ஒருமையையில் பேசி திட்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில், அதிமுக சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. அண்ணா நூற்றாண்டு விழா எனும் பெயரில் இந்த அரசியல் கூட்டம் நடைபெற்றது.

அதில் பல்வேறு அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதில், முன்னாள் அதிமுக அமைச்சர் முல்லை வேந்தனும் கலந்து கொண்டார். அந்த விழாவில் முல்லை வேந்தன் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

அவர் பேசுகையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை கூறி, அந்த அப்பகுதியில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ) இருக்கும் பெண் காவலரை குறிப்பிட்டு, ‘ ஒரு பொம்பள, அவ பண்ணி மேய்க்க கூட லாயக்கில்லை. அவ ஒரு அடங்காபிடாரி.

ஒரு பெட்டிஷனை கொடுக்க அனுமதி கேட்டால், எங்க வந்து கொடுக்குற, அங்க போய் கொடு என கூறுகிறார் , பின்னர், டி.எஸ்.பியிடம் சென்று, ‘ உங்களுக்கு கிழே இருக்குற அந்த பொம்பள ஒரு அடங்காபிடாரி தெரியுமா?” என கூறிவிட்டு வந்தேன் என கூறினார்.

முன்னாள் அமைச்சர், ஒரு பெண் காவலரை ஒருமையில் பேசி திட்டி பேசியது, அப்பகுதியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்