முதலமைச்சர் பற்றிய தவறான போஸ்டர்.! பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் அதிரடி கைது.!

Default Image

முதல்வர் ஸ்டாலின் குறித்த சர்ச்சையான போஸ்டர் ஒட்ட காரணமாக இருந்த கிருஷ்ணகுமார் முருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் என தகவல் வெளியாகியுள்ளது. 

இம்மாதம் கடந்த 11ஆம் தேதி முதல்வர் மு.க,ஸ்டாலினை குறிக்கும் வகையில் சென்னையில் முக்க்கிய பகுதிகளில் தவறான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து, அந்த மாதிரியான போஸ்டர்களை ஒட்டியது யார்? யாருடைய தூண்டுதலின் பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்போது அந்த போஸ்டரை ஒட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பெயர் கிருஷ்ணகுமார் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இவரது தூண்டுதலின் பெயரில் தான் இந்த போஸ்டர் ஒட்டியுள்ளது போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட, கிருஷ்ணகுமார் முருகன் என்பவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்