அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் ரத்து.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீதி பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் விதிகளை மீறி போராடியதாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.
அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.