#JustNow: ஆ.ராசாவுக்கு எதிராக கையெழுத்து..போலி வழக்குகளில் பாஜக தொண்டர்கள் கைது – அண்ணாமலை

Default Image

ஆ.ராசாவின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் போலி வழக்குகள் பதியப்பட்டு பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ச்சியாக சர்ச்சை பேச்சுக்களை பேசி வருகின்றனர். திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சியை பார்த்து தமிழக மக்களுக்கு கோபம் எல்லை கடந்து போய்விட்டது.

சனாதனம் குறித்த ஆ.ராசாவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம் நடத்தாது. இதுபோன்ற எம்.பி மக்களிடையே வேண்டாம் என கையெழுத்து இயக்கம் மட்டும் நடத்துவோம். அதன்படி, ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக சார்பில் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. ஆ.ராசாவுக்கு எதிராக 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கையெழுத்துவிட்டனர். சாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதத்தில் எந்த கொள்கையும் கிடையாது.

காலங்களை கடந்து அழிவை சந்திக்காத தர்மம் சனாதன தர்மம். சாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதம் எந்த காலத்திலும் செயல்பட்டது கிடையாது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ள சனாதன தர்மம் பற்றி அ.ராசாவுக்கு தெரியாது. ஆ.ராசா பேச்சால் சமுதாயாத்தில் பிளவு ஏற்படாதாம், அதனை கண்டித்து பேசினால் பிளவு ஏற்படுமாம், வேடிக்கையாக இருக்கிறது என தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேசிய அண்ணாமலை, சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை வாங்கவே ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சை திமுக அனுமதிக்கிறது. இந்து என்பது மதமே கிடையாது. இந்து என்பது வாழ்வியல் முறை, ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து திமுக அமைச்சர்கள் யாரும் பேசவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்