ஆவின் பால் பாக்கெட்டில் ‘ஈ’.! அதிர்ச்சியில் நுகர்வோர்.! அதிகாரிகள் தீவிர விசாரணை.!

Default Image

மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டு, எப்படி ஈ வந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது.  

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் ஆவின் பால் வேன் மூலம் டிப்போக்களுக்கு அனுப்பப்படும். அப்படி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை கழகம், கீழமாத்துார் உ ள்ளிட்ட ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் அதிகாலையில் வினியோகிக்கப்பட்டன.

இதில் காமராஜ் காமராஜ் பல்கலையில் அருகே உள்ள ஆவின் பால் விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை ஒரு பெண் பச்சை நிற ஆவின் அரைலிட்டர் பால் பாக்கெட் வாங்கியுள்ளார். அதில் ஈ பாக்கெட் உள்ளே இருந்தததை கண்டு அதிர்ந்த அந்த பெண், விற்பனையாளரிடம் பால்பாக்கெட்டை திருப்பி கொடுத்துள்ளார்.

பின்னர், ஆவின் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறுகையில், பேக்கிங் செய்யும் போது தவறுதலாக ஏதேனும் நடந்திருக்கும். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்