ஆ.ராசா குறித்த சங்கி கும்பல்களின் அவதூறு பிரச்சாரம் தொடருமானால் உரிய பதிலடி கொடுக்கப்படும் – வேல்முருகன்

Default Image

திரு.ஆ.ராசா.அவர்கள் குறித்து அநாகரீகமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் தொடர்ந்து “காவி சங்கி” கும்பல்கள் பேசி வருவது ஏற்புடையதல்ல கடுமையான கண்டனத்திற்குரியது என வேல்முருகன் ட்வீட். 

ஆ.ராசா எம்.பி சமீபத்தில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்துக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது அது சர்ச்சையாகி உள்ளது.

இந்த நிலையில், ஆ.ராசா-வுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘திமுக வின் துணைப் பொதுச் செயலாளர் மக்களவை உறுப்பினருமான திரு.ஆ.ராசா. அவர்கள் “மனு ஸ்மிருதியில்” குறிப்பிடப்பட்டுள்ளதைத்தான் எளிய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறினாரே தவிர இந்து மக்களையோ,இந்து மதத்தையோ புண்படுத்தும் வகையில் பேசவில்லை.

திரு.ஆ.ராசா.அவர்கள் குறித்து அநாகரீகமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் தொடர்ந்து “காவி சங்கி” கும்பல்கள் பேசி வருவது ஏற்புடையதல்ல கடுமையான கண்டனத்திற்குரியதாகும் திரு.ஆ.ராசா. அவர்கள் குறித்த சங்கி கும்பல்களின் அவதூறு பிரச்சாரம் தொடருமானால் உரிய பதிலடி கொடுக்கப்படும்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்