கன்னியாகுமரியில் பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

Default Image

கன்னியாகுமரியில் பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதேபோல்  திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்ததுடன் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், திங்கள்சந்தை, இரணியல், குலசேகரம்,என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்தது.

இந்நிலையில் சின்னமுட்டம், மணக்குடி உள்ளிட்ட மீனவ கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.மேலும்  குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

இதேபோல்  சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “தென்கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறக்கூடும். அதனைத் தொடர்ந்து தெற்கு ஓமன் மறறும் வடக்கு ஏமன் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை வாய்ப்புகள் ஏதும் இல்லை.

தெற்கு இலங்கை அருகேயும், வட தமிழகத்தின் உள் பகுதியிலும் இரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவி வருகின்றன. இவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்