அதிமுக அலுவலக சூறை.! சிவி.சண்முகத்திடம் வாக்குமூலம்.!

Default Image

ஜூலை 11 அன்று அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட புகார் தொடர்பாக மீண்டும் ஒரு முறை விசாரணை செய்து,முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இருந்து சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். 

கடந்த ஜூலை 11ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினர் இடையே, மோதல் வெடித்தது . இதில் அதிமுக அலுவலகம் சேதமடைந்தது. பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது.

இது குறித்து இபிஎஸ் தரப்பில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்து இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் சிலவை திருடப்பட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகார் மீதான விசாரணையை சிபிசிஐடி போலீசார் கையாண்டனர். ஏற்கனவே, புகார் மீதான விசரணையை சி.வி.சண்முகம் அவர்களிடம் நடத்தினர். தற்போது மீண்டும் ஒரு முறை விசாரணை செய்து, சி.வி.சண்முகத்திடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த வாக்குமூலத்தை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி தரப்பில் தகவல் வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்