நம்மை தலை நிமிர வைத்தவரை நாம் தலை நிமிர வைப்போம் – ஆசிரியர் கீ.வீரமணி

Default Image

நான் கண் மூடினாலும் என் தொண்டர்கள் விழித்து கொண்டே இருப்பார்கள் என்று எண்ணியவர் பெரியார் என ஆசிரியர் கீ.வீரமணி பேச்சு. 

பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிறுகனுரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலக கட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி சிறுகனுரில் 27 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.

 இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆசிரியர் கீ.வீரமணி, நான் கண் மூடினாலும் என் தொண்டர்கள் விழித்து கொண்டே இருப்பார்கள் என்று எண்ணியவர் பெரியார்; அதே போல திராவிட ஆட்சி அமைந்து உள்ளது. திருச்சியில் 95 அடி உயர பெரியார் சிலை வைக்கப்படுகிறது; நம்மை தலை நிமிர வைத்தவரை தாம் தலை நிமிர வைப்போம்.’ என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்