மின்கட்டண உயர்வு.! தமிழகம் முழுவதும் இ.பி.எஸ் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!

Default Image

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு இபிஎஸ் தலைமை தாங்கிவருகிறார்.   

மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்ட கூட்ட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார்.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒரு நன்மையையும் ஏற்படவில்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. 15 மாத காலமாக கமிஷன், கலெக்சன், கரப்ஷன்  அதுதான் சரியாக நடந்து வருகிறது.

எல்லா துறையிலும் ஊழல் தான் நடந்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மை செய்ய இவர்கள் கவனம் செலுத்தவில்லை. திமுக ஆட்சி அமைந்த உடன் சொத்து வரி உயர்ந்தது. அதுவும் 100 சதவீதம் உயர்ந்தது.’ என பல்வேறு குற்றசாட்டுகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்