திருமண முந்தைய நாள் மணமகனுக்கு நேர்ந்த சோகம்.. பெற்றோர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!

Default Image

நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் உயிரிழந்த மணமகன் ராஜ் என்பவரின் உடல் உறுப்புகளை தனமாக அவரது பெற்றோர் அளித்துள்ளனர். 

சென்னை, திருப்போருர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் இவரது மனைவி கலா. இவர்களது மகன் தான் ராஜ். இவருக்கு நேற்று திருப்போரூரில் ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், கடந்த 9ஆம் தேதி தான் வேலை பார்த்த தனியார் கல்லூரியில் நண்பர்களுக்கு பத்திரிகை கொடுக்க சென்றவர் சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமுற்ற ராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று முன்தினம் மணமகன் இறந்த செய்தி அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்கள் மகன் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டுமே என நினைத்த ராஜ் அவர்களின் பெற்றோர் , ராஜின் உடலுறுப்புகளை தானமாக கொடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்