நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதீத கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. பள்ளிகளுக்கு விடுமுறை.!

Default Image

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மேற்கு திசையில் காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை, கனமழை பெய்தது.

கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்தது. அதேபோல் திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலையில் மழைநீரால் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி மேற்கண்ட பகுதிக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்