#JustNow: விதிமீறிய 694 ஆட்டோக்கள் பர்மிட் ரத்து.. ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி வசூல்!

Default Image

மதுரையில் விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூல் என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.

விதிகளை மீறிய 694 ஆட்டோக்களின் பர்மிட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் மதுரை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மதுரை மாநகரில் 2013-17 வரை விதி மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ரூ.2.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதி மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது. விதி மீறி ஆட்டோக்களை இயக்கியது தொடர்பாக 1.5 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனறும் அறிக்கையில் தகவல் கூறப்பட்டுள்ளது. மதுரை காவல் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்