#BREAKING: அமைச்சர் கேஎன் நேரு மீதான வழக்கு ரத்து!

தமிழநாடு அமைச்சர் கேஎன் நேரு மீது அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து. 

அமைச்சர் கேஎன் நேரு மீது அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்து 2020-ல் கோவை பொதுக்கூட்டத்தில் எஸ்பி வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக கோவை நீதிமன்றத்தில் கேஎன் நேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கேஎன் நேரு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்து, அவர் மீதான வழக்கை ரத்து செய்தது. கோவை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்தார் நீதிபதி இளந்திரையன்.

Leave a Comment