புதன்கிழமை பதவியேற்கிறார் கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி!15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்!

Default Image

புதன்கிழமை கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி  பதவியேற்க உள்ளார். 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் இரண்டு நாட்கள் மட்டும் முதலமைச்சராக நீடித்த எடியூரப்பா தமது பதவியை ராஜினாமா செய்த சிறிது நேரத்தில், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க  உரிமை கோரினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, ஆளுநர் தம்மை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பதவியேற்பு விழாவுக்கு சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 15 அமைச்சர் பதவிகளும், காங்கிரசுக்கு 16 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.  துணை முதலமைச்சராக கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா பதவியேற்பார் என்றும், நிதியமைச்சர் பொறுப்பை குமாரசாமியே வைத்துக் கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பதவியேற்பு விழாவை 23ம் தேதி நடத்த காங்கிரஸ் -மதசார்பற்ற ஜனதா தள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்