பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

Default Image

பிரிட்டனின் நீண்ட காலம் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக 96 வயதில் காலமானார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,”2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணங்களின் போது அவரது மாண்புமிகு ராணி இரண்டாம் எலிசபெத் உடன் மறக்க முடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன்.

அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் மறக்க முடியாது” என்று ட்வீட் செய்துள்ளார்.

இரண்டாம் எலிசபெத் ஒரு கம்பீரமானவராக நினைவுகூரப்படுவார்,அவர் தனது தேசத்திற்கும் மக்களுக்கும் எழுச்சியூட்டும் தலைமையை வழங்கினார்,அவரது மறைவால் வேதனை அடைந்தேன்,”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்