#BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 24-ஆம் தேதி பணி நாள் என்றும் அன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment