BREAKING NEWS:கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி!

Default Image

கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி.

இதற்கு முன்  ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.மேலும் கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி மே 21ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதாபோல் மே 21ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார், அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்