நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி!

Default Image

தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் வெற்றி.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு ஆதரவாக 48 வாக்குகள் கிடைத்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், 81 பேர் கொண்ட சட்டப்பேரவையில் 48 பேரின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில், தன்னுடைய எம்எல்ஏ பதவி குறித்த கேள்வி நிலவி வந்ததால் தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, வெற்றி பெற்றார் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்