ஒரே நாளில் 3.8 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைத்துள்ளனர்..

Default Image

புனே மாவட்டத்தில் சுமார் 3,82,351 பேர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர்.

புனே மாவட்டத்தில் 78,69,276 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறை 21 தொகுதிகளில் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகர்ப்புற வாக்காளர்களை விட அம்பேகான், இந்தாபூர், போர், கெத் மற்றும் மாவல் போன்ற கிராமப்புற சட்டமன்ற வாக்காளர்கள் தான் அதிகளவு இணைத்துள்ளனர் என்று கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜேஷ் தேஷ்முக் கூறினார்.

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காத வாக்காளர்கள், www.nvsp.in இல் 6B விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்