ஜெயலலிதா மரண தொடர்பான அறிக்கையில் பல பிரச்சனைகள் உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

Default Image

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம் என முதல்வர் பேச்சு.

முன்னாள் அமைச்சர் பெங்களூரு பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் பல பிரச்சனைகள் உள்ளது. அதெல்லாம் இப்போது சொல்லமாட்டேன்.  ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

விசாரணை அறிக்கையை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம், பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம். இதைத்ததன் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். ஓபிஎஸ் சமாதானப்படுத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அப்போதைய முதல்வர் இபிஎஸ் அமைத்தார். எனவே, விசாரணை அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதுபோன்று தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டே என கூறியவர் இபிஎஸ் என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதும் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சி வந்தவுடன் ஆணையத்தை ஒழுங்குபடுத்தி விசாரணை நடைபெற்றது. சட்டமன்றத்தில் திமுக என்னென்ன வாக்குறுதிகள் அளித்தததோ அவைகளை நிறைவேற்றி வருகிறோம் என இவைகளை குறிப்பிட்டு முதலமைச்சர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்