#BREAKING: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

Default Image

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் சிலையை அகற்றுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சண்டை பயிற்சி கலைஞரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து,பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு இன்று நிபந்தனை ஜாமின் வழங்கியது  சென்னை உயர் நீதிமன்றம்.

4 வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திடவும், இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்