விவசாயிகள் பிரச்சனையை காவிரி தீர்ப்பு தீர்க்கப்போவதில்லை! கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, தமிழக விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மாநிலங்களுக்கிடையிலான சச்சரவை வேண்டுமானால் தீர்த்து வைக்கலாம் என்றும், இதுவே இறுதித் தீர்வு அல்ல என்றும் கூறியுள்ளார். எனவே காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற பெயரில் சனிக்கிழமை நடத்தப்படும் கூட்டம், காவிரி நீர் குறித்த ஒத்த சிந்தனை கொண்டவர்களை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கான செயல்திட்டத்தை வடிவமைக்கும் நோக்கில் கூட்டப்படுவதாகவும் கமல்ஹாசன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment