ஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர்!

Default Image

பணியில் இருந்து உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரபரப்பான புகார்களை தெரிவித்து வந்த நிலையில், நேற்று ஒரே அமர்வில் அவருடன் 11 வழக்குகளை விசாரித்தார்.

உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை தொடங்கியுள்ளதால் 22ம் தேதி ஓய்வு பெற வேண்டிய செல்லமேஸ்வர் நேற்று மாலையே ஓய்வு பெற்றார். ஜனநாயகத்தை காப்பதில் செல்லமேஸ்வர் சிறப்பாகப் பணியாற்றியதாக நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அவருக்கு புகழாரம் சூட்டினர். தமக்கு பிரிவுபசார விழா வேண்டாம் என்று ஏற்கனவே அவர் மறுத்துவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்