குட்கா விவகாரம்:டிஜிபி ராஜேந்திரன்,அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்! முத்தரசன்

Default Image

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ,குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிபிஐ விசாரணையை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்ட விரோதமாக தயாரித்து விற்பனை செய்ய அனுமதித்து பெருந் தொகைப் பெறப்பட்டுள்ளது.

இதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழல் தொடர்பான வழக்கில் அமைச்சர் உட்பட உயர்அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. எனினும் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதனை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் காவல்துறை அதிகாரிகள், ராஜேந்திரன், ஜார்ஜ மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பொறுப்பில் இருந்து விலகி விசாரணையை சந்திக்க வேண்டும்.

இல்லயெனில், இந்த வழக்கின் விசாரணை நேர்மையாக நடைபெற, முதல்வர் வழக்கில் தொடர்புடையோர் அனைவரையும் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்