மதுரையில் ஐசிஐசிஐ அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

Default Image

முக்கிய ஆவணங்கள்,மதுரை ஐசிஐசிஐ ப்ரொடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் அலுவகலத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து சேதமாயின. மதுரை கே.கே.நகர் வக்ஃபு வாரிய கலை கல்லூரி எதிரே அமைந்துள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில், ஐசிஐசிஐ ப்ரொடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறார்.

இன்று காலை 8.30 மணியளவில் அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீயில் அங்கு வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமாயின. அலுவலகத்தில் இருந்து கரும்புகை வருவதையறிந்து அருகிலிருந்தோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்