காவிரி பிரச்சனைக்கும் கர்நாடக அரசியல் குழப்பத்திற்கும் தொடர்பில்லை!அமைச்சர் கடம்பூர் ராஜூ

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ,கர்நாடக அரசியல் குழப்பத்திற்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தமிழக அரசின் தமிழ்செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய கடம்பூர் ராஜூ, பயிர்கடன் தள்ளுபடி மூலம், உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழ்வதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment