BREAKING NEWS:எடியூரப்பா முதலமைச்சர் பதவிக்கு தொடங்கியது ஆபத்து?என்னவாகும் எடியூரப்பா முதலமைச்சர் பதவி!

Default Image

எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெர்வித்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது.

உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே அரிதினும் அரிதாக விடிய விடிய விழித்திருந்த 3 நீதிபதிகள் அமர்வு, அதிகாலை 2 மணி முதல் காலை 5.30 மணி வரை விசாரணை நடத்தி, எடியூரப்பா பதவியேற்க தடையில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்தது. இதன்மூலம் கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். யாகூப் மேமன் மும்பைத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட போதும் இதே போன்று உச்சநீதிமன்றம் விடிய விடிய விசாரணை நடத்தியது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இரவு முழுக்க காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வியும் பாஜக சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் மத்திய அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் வாதங்களை முன்வைத்தனர். எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.இதில் எடியூரப்பா தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜரானார்.

இந்நிலையில் இந்த விசாரணையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்றும்  ஆளுநரிடம் எடியூரப்பா அளித்த கடிதத்தில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று  பாஜக வழக்கறிஞர் முகுள் ரோஹித்கி  தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெர்வித்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது. கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹித்கி 2 கடிதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் . மே 15 ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லாததால் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது.இந்நிலையில்  மே 16 ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவு உள்ளது என்று பாஜக வழக்கறிஞர் முகுள் ரோஹித்கி  தெரிவித்துள்ளார்.

மேலும்  ஆளுநரின் முடிவுக்கு எதிராக தம்மையும் ஒரு வாதியாக சேர்க்குமாறு ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்