கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை..!
கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை.
கள்ளக்குறிச்சி புக்கிரவாரி புதூரில் உள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் பூட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
புக்கிரவாரி அருகே விளைநிலத்தில் நகைகள் சிதறி கிடந்த நிலையில், மாவட்ட எஸ்பி தலைமையிலான குழு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.