#Corona:மக்களே மிகக் கவனம்…கொரோனாவுக்கு ஒரே நாளில் 47 பேர் பலி!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,734 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 17,135 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,37,057 ஆக பதிவாகியுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,26,477 பேர் ஆக உள்ளது.
  • மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை  4,34,03,610 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,04,84,30,732   கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 23,49,651 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்