நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.!

பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் தன்னை தாக்கியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது மகா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  மகா காந்தி தொடர்ந்த அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதனையடுத்து, இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment