#JustNow: கோடநாடு வழக்கு – இருவருக்கு ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கைதான் இருவருக்கு வழங்கப்பட ஜாமீன் நிபந்தனையில் மாற்றம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் 2 பேருக்கு வழங்கப்பட்ட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோர் 1, 15-ம் தேதிகளில் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஆணியிடப்பட்டுள்ளது. உதகையில் தங்கியிருந்து திங்கட்கிழமைதோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி நீதிமன்ற அனுமதி இல்லாமல் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.  ஊட்டியில் தங்குவதால் உயிருக்கு ஆபத்து என கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கைதான தனபால், ரமேஷ் ஆகியோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் நிபந்தனையை மாற்றி உத்தரவிட்டது.

Leave a Comment