BREAKING NEWS:எடியூரப்பா ஆட்சியின் ஆயுட்காலம் மிகக்குறைவு!எங்கள் எம்எல்ஏக்கள் 100% எங்களுடன் உள்ளனர்! டி.கே . சிவக்குமார்

இந்த அரசின் ஆயுட்காலம் குறைவானது என்று காங்கிரஸ் முன்னால் அமைச்சர்   டி.கே . சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்  காங்கிரஸ்  நீதிக்காக நாங்கள் போராடுவோம். எங்கள் எம்எல்ஏக்கள் 100% எங்களுடன் உள்ளனர்.இந்த அரசின் ஆயுட்காலம் குறைவானது. நாங்கள் பெரும்பான்மையுடன் இருப்பதால் நம்பிக்கையுடன் உள்ளோம் என்று காங்கிரஸ் முன்னால் அமைச்சர்   டி.கே . சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல்  ஆனந்த் சிங் தவிர அனைத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களும் எங்களுடன் இருக்கின்றனர்.ஆனால் மாயமான காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் பிரதமர் மோடியின் பிடியில் உள்ளார் என்று பெங்களூருவில் காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

சற்று முன்  கர்நாடக சட்டப்பேரவை முன்பு நடக்கும் காங். எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

இதேபோல் எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் தர்ணா ஈடுப்பட்டனர்.

எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகாட்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.இதில் தற்போது கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் மஜத தலைவர் தேவகவுடா பங்கேற்ற்றுள்ளனர்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment