இன்றைய நாளின் ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

Default Image

மேஷம்: உங்களின் அறிவுத்திறனை இழக்கக் கூடும். சற்று பதட்டமாக காணப்படுவீர்கள். பிரார்த்தனை நல்ல பலன் தரும்.

ரிஷபம்: மோசமான சூழ்நிலை காணப்படும். அதனை சமாளிப்பதற்கு போதுமான தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: இன்று வளர்ச்சிக்கு சாதகமான நாளாக அமையாது. ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இன்று மனதை சமநிலையுடன் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கடகம்: இன்றைய நாள் நல்ல முடிவுகளை எடுப்பதற்கு சாதகமாக அமையும். உங்கள் திறமை காரணமாக உங்கள் இலட்சியத்தில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்: இன்று அழுத்தமான சூழ்நிலைகள் காணப்படும். வெற்றியடைய குறைந்த வாய்ப்பிகளே உள்ளன. பாடல்கள் கேட்பதன் மூலம் மன நிம்மதி பெறலாம்.

கன்னி: தினசரி செயல்களை மேற்கொள்வது கூட இன்று கடினமாக இருக்கும். சற்று கவலையுடன் காணப்படுவீர்கள். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் நற்பலன்களைக் காணலாம்.

துலாம்: மற்றவர்களிடம் யதார்த்தமாக அணுக வேண்டும். உங்கள் செயல்களில் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருந்தால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். வெளியிடங்களுக்குச் செல்வது ஆறுதலை அளிக்கும்.

விருச்சிகம்: உறுதியுடனும் தைரியத்துடனும் செயல்பட்டு இன்று செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு: முக்கியமான விஷயங்களை நிறைவேற்றுவதற்கு நல்ல நாள். ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.

மகரம்: இன்று அறிவுப்பூர்வமாக செயல்களை கையாள வேண்டும். வெற்றி அடைவதற்கு நீங்கள் கடினமான முயற்றிகள் மேற்கொள்ள வேண்டும்.

கும்பம்: உங்கள் நலன்களை மேம்படுத்துவதற்கான செயல்களை முடிவெடுப்பதற்கு இன்று உகந்த நாள். இன்று நீங்கள் திருப்தியுடன் காணப்படுவீர்கள்.

மீனம்: இன்று முன்னேற்றமான பலன்கள் காணப்படும். உங்கள் முயற்சியினால் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மன ஆற்றலும் நேர்மறையான எண்ணங்களும் இருந்தால் வெற்றி கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்