இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? – வானதி சீனிவாசன்

Default Image

தமிழகத்தில் எது விலை ஏறினாலும் பாஜக தான் காரணம் என திமுக பேசுகிறது என வானதி சீனிவாசன் பேச்சு. 

மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் பல   இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்; 100 யூனிட் இலவசமாக கொடுத்து ஏழை எளிய மக்களை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? நான் சவால் விடுகிறேன்; தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது பிரிவினை தான். தமிழகத்திற்கு ஒவ்வொரு முறையும் உதவி செய்வது பாஜக தான்; தமிழகத்தில் எது விலை ஏறினாலும் பாஜக தான் காரணம் என திமுக பேசுகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்