காமன்வெல்த் 2022 : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி.!

Default Image

காமன்வெல்த் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய மகளிர் அணியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இங்கிலாந்தில் வரும் (ஜூலை) 28ஆம் தேதி முதல் காமன் வெல்த் போட்டிகளை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து, பர்மிங்காமிற்கு கிளம்பினர்.

அப்போது, வழக்கம் போல,  கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்,  இந்திய மகளிர் அணியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி உறுதிப்படுத்தினார்.

இதற்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுலுக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் 29ஆம் தேதி ஆஸ்திரேலிய அணி உடன் முதல் காமன்வெல்த் போட்டியை விளையாட வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்