பிட்காய்ன் மீதான 75 சதவீத பங்கை விற்றது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம்.!
பிட்காய்ன் மீதான 75 சதவீத பங்கை டெஸ்லா நிறுவனம் விற்றுவிட்டது.
உலகம் முழுக்க தற்போது பிரபலமாகியுள்ள முதலீட்டு சந்தை என்றால் அது பிட்காய்ன் தான். அது எந்த ஒரு தொழில் உற்பத்தி அல்லது சேவை நிறுவனமும் கிடையாது. அது ஒரு நாணயம். அதன் மீது பலர் முதலீடு செய்ய தொடங்கியதால் அதன் மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது.
அது ஏறிக்கொண்டே சென்றதால் அதன் மீது மேலும் பலர் முதலீடு செய்துகொண்டே வருகின்றனர். உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமும் பெரும்பகுதியை முதலீடு செய்து இருந்தது.
தற்போது , அந்த பிட்காயின் முதலீட்டில் இருந்து 75 சதவீத பங்கை விற்றுவிட்டு வெளியேறி விட்டது டெஸ்லா நிறுவனம். டெஸ்லா 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்த நிலையில் அதில் 936 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிட்காய்ன் பங்கை விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.