#BREAKING: ஆவின் பொருட்களின் விலை உயர்வு!

ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு.

ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.50 , ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

200 கிராம் தயிர் விலை ரூ.25 லிருந்து ரூ.28 ஆக அதிகரித்துள்ளது. தயிர் 100 கிராம் ரூ.10 லிருந்து 12 ரூபாய் ஆகவும், 1 கிலோ ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் ஆவின் தயிர் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535ல் இருந்து ரூ.580 ஆகவும், 500ml ஆவின் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அந்நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Comment