பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்.! தடை ஏதும் விதிக்க முடியாது.!

Default Image

பத்திரிகையாளர் முஹமது ஜுபைருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 

உத்திரபிரதேசத்தில் பத்திரிகையாளர் முஹமது ஜுபைர் மத உணர்வுகளுக்கு புண்படும்படியான பதிவுகளை டிவீட் செய்ததன் காரணமாக அவர் மீது வெவ்வேறு இடஙக்ளில் 6 முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. முஹமது ஜுபைர் ஓர் செய்தி வலைதளத்தின் இணை நிறுவனர் ஆவர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், அவர் மீதான 6 வழக்குகளும் ஒரே வழக்குகள் என்பதால் ஒரே வழக்காக மாற்றப்பட்டன. மேலும் அவை டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டன.

மேலும், அவருக்கு உச்சநீதிமன்றம் அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜாமீன் வழங்கி உள்ளது. இதில், அவர் டிவீட் செய்வது குறித்து எந்த தடையும் விதிக்க எங்களால் முடியாது எனவும், தொடர்ந்து காவலில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்