#Breaking : இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு.!

Default Image

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே , அதிபராக வெற்றிபெற்றுள்ளார். 

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, இன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இடதுசாரி ஆதரவாளரான அனுர திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

225 நாடளுமன்ற உறுப்பினர்கள்  வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையில் 223 பேர் மட்டுமே வாக்களித்தனர்.  2 பேர் புறக்கணித்தனர். 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 134 வாக்காளர்கள் ரணில் விக்ரம்சிங்கை தேர்வு செய்துள்ளனர். அதன்படி, ரணில் விக்ரமசிங்கே 2024 நவம்பர் மாதம் வரையில் இலங்கை அதிபர் பதவியில் இருப்பார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்