நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் விலக்கு பெறுவது தான் தமிழக அரசின் கொள்கை மற்றும் திட்டம். அதன்படி, நீட் மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசின் இரண்டு துறைகள் கேட்ட கேள்விகளுக்கு சட்ட வல்லுநர்களை கொண்டு பதில் தயாரித்துள்ளோம். இந்த பதில் அறிக்கைக்கு ஓரிரு நாட்களில் ஒப்புதல் பெறுவோம். அதன்பின், பதில் அறிக்கையை அனுப்பிய பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.