#BREAKING: தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ சோதனை!

Default Image

கேரளாவில் ஹெராயின், துப்பாக்கிகள் சிக்கிய வழக்கில் சென்னை உள்பட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை.

தமிழகத்தில் சென்னை உள்பட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) சோதனையில் ஈடுபட்டுள்ளது. கேரள மாநிலம் விழிஞம் துறைமுகம் அருகே 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், கேம்ப் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை என மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் 11 இடங்களிலும், திருப்பத்தூரில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்