புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இலங்கையில் தேர்தல் தொடங்கியது.! 

Default Image

இலங்கையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் புதிய அதிபரை 225 நாடளுமன்ற உறுப்பினர்கள்  வாக்களித்து தேர்ந்தெடுக்க உள்ளனர்

இலங்கையில் கடும் நெருக்கடி காரணமாக எழுந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து , எதிர்பாரா அரசியல் நகர்வுகள் ஏற்பட்டன. அதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாமல் இலங்கையை விட்டு தப்பித்தது தான்.

அதன் பின்னர் அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி, அதனை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்க பட்டார்.

அதன் பிறகு 20ஆம் தேதி (இன்று) தேர்தல் அங்கு நடைபெறுகிறது. இதில் புதிய அதிபரை 225 நாடளுமன்ற உறுப்பினர்கள்  வாக்களித்து தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இந்த போட்டியில், ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இடதுசாரி ஆதரவாளரான அனுர திஸாநாயக்க ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்