#Breaking : நீட் தேர்வு… மாணவிகளிடம் உள்ளாடை களைய சொல்லி சோதனை.! போலீசார் வழக்குப்பதிவு.!  

Default Image

கேரளாவில், நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி கண்காணிப்பாளர் சோதனை நடத்தியுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் எழுதப்படும் நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் இந்திய முழுவதும் ஏராளமான மாணவ மாணவிகள் எழுதினர்.

கடும் சோதனைக்கு பிறகே மாணவ மாணவிகள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், கேரளாவில், கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்விற்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை களைய சொல்லி சோதனை நடைபெற்றதாம். இதனால் மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால்.  பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் சார்பில் கொல்லம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கொல்லம் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்