வெடிகுண்டு மிரட்டல் ! பெங்களூரு பள்ளியிலிருந்து 1500 மாணவர்கள் வெளியேற்றம்..

Default Image

தெற்கு பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள ஐடியல் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததும் காவல்துறைக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அரை மணி நேரத்திற்குள், தடுப்பு நடவடிக்கையாக 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து மேற்கு பெங்களூரு டிசிபி லக்ஷ்மன் பி நிம்பர்கி கூறுகையில், “மாணவர்களை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு செயலிழக்கும் படை மற்றும் மோப்ப நாய் படை பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தியது.பள்ளி வளாகத்தின் ஒவ்வொரு மூலையிலும் போலீசார் ஆய்வு செய்தும் எதுவும் கிடைக்காததால் இந்த மிரட்டல் ஒரு புரளி போல் தெரிகிறது என்றார்.

இதனிடையே, இச்சம்பவத்தால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்