#BREAKING : குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது – தனது வாக்கை பதிவு செய்தார் முதல்வர்..!

Default Image

குடியரசு தலைவர் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.

தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முள்பட நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தலில் வாக்களிப்பதற்காக மருத்துவமனையில் இருந்து நேரடியாக தலைமைச் செயலகம் சென்றார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் உள்ள வாக்கு பெட்டியில், தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களிக்க உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்