25 லட்சம் தருகிறேன்… மனைவியாக இருந்துவிடு… தொழிலதிபரால் மனம் வருந்திய விஷால் பட நடிகை….!

Default Image

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை நீது சந்திரா. இவர் தமிழில், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன், வைகை எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார்.

ஹீரோயினாக நடிப்பதை தவிர்த்து உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிங்கம் 3, சேட்டை, திலகர், மங்காத்தா ஆகிய படங்களில் இடம்பெற்ற பலர்  குத்துப்பாடல்களிலும் நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் ” தேசிய விருது பெற்ற 13 பேருடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறேன். சில மிகப்பெரிய பெரிய படங்களிலும் நடித்திருக்கிறேன் ஆனாலும், நான் இன்று வேலை இல்லாமல் இருக்கிறேன்” என பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ” என்னிடம் ஒரு பெரிய தொழிலதிபர் எனக்கு மாதம் 25 லட்சம் தருவதாகவும், நான் அவருடைய சம்பளத்துக்கு மனைவியாக வேண்டும் என்றும் கூறினார். எனக்கு மாதம் 25 லட்சம் தருகிறேன், என் மனைவியாக இருக்கிறீர்களா..? என கேட்டார்.என்னிடம் பணமோ, பட வாய்ப்புகளோ இல்லை.
இதை நினைத்து கவலையாக இருக்கிறது. நிறைய படங்களில் நடித்தும் இப்பொது நான் தேவையில்லாதவள் போன்று உணர்கிறேன்” என வருத்தத்துடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்