கே.பி. முனுசாமி, ஜெயகுமார் போன்ற ஒரு சிலரால் எடப்பாடி பழனிசாமிக்கு அழிவு வந்து விட்டது – புகழேந்தி

Default Image

ஓ.பி.எஸ்-ன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வோம் என புகழேந்தி பேட்டி. 

ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம். நான்கு வருடம் நடந்த பணக் கொள்ளையையும், ஜாதி வெறியையும் கூறிவிட்டார். பொன்னையன் வாழ்க! அவர் உயிருக்கு ஆபத்து என்பதால் பாதுகாப்பு தேவை என தெரிவித்துள்ளார்.

மேலும், ஓ.பன்னீர் செல்வம் விரைவில் புரட்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி உள்பட அவர் பக்கம் உள்ள அனைவரும் சிறையில் இருப்பார்கள். விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும். ஓ.பி.எஸ்-ன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வோம். கே.பி. முனுசாமி, ஜெயகுமார் போன்ற ஒரு சிலரால் எடப்பாடி பழனிசாமிக்கு அழிவு வந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்